உழவன் பவுண்டேஷன் சார்பில் விவசாயிகளில் சிறந்த 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நடிகர் கார்த்தி விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளார். பின்னர் அவர் பேசுகையில்; மக்கள் அனைவரும் விவசாயத்தை பற்றி சிந்திக்க வேண்டும். விவசாயிகளை பற்றியும் அவர்களது வாழ்வாதாரம் குறித்தும் யோசிக்க வேண்டும். அதனால் தான் அவர்களை இங்கே வரவழைத்து மரியாதை செய்து அடையாளப்படுத்துகிறோம். நெல் மட்டும் இல்லாமல் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கான தேவைகளை ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஜீன்ஸ், வாட்ச் வாங்க போகும் போது விலை கேட்காமல் வாங்கும் நாம், கீரை கட்டு வாங்க பேரம் பேசுறோம். இது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விவசாயிகளின் நலனை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
விவசாயிகளிடம் தான் பேரம் பேசுறோம் – கார்த்தி வேதனை
Latest News
போஸ்டருடன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சொப்பன சுந்தரி படக்குழு!
சொப்பன சுந்தரி பட ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சொப்பன சுந்தரி
'லாக்கப்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில்...