தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் கோஷியாமி தமாரா சித்தோல். 37 வயதான இப்பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்த சித்தோலுக்கு, கடந்த 7-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரிட்டோரியா நகரி்ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here