நமது உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு இயற்கையின் வரப்பிரசாதமான புதினா தீர்வுகளை தருகிறது.

மருத்துவ குணம் கொண்ட மூலிகை

புதினா ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகை ஆகும். புதினாவைப் பயன்படுத்துவதினால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கச் செய்து பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பெண்களின் மாதவிடாய் காலகட்டத்தில் உணவில் சேர்த்து உண்டால் மிகுந்த பயன் தரும். வயிறு சம்பந்தமான அனைத்து விதமான தொந்தரவுகளுக்கு தீர்வு தரக்கூடியதாகும். வயிற்று வலி, வயிறு உப்புசம், செரிமான கோளாறு என அனைத்துக்கும் சிறந்த மூலிகை உணவு. கருவேப்பிலை, மல்லித்தழைப் போல இதனை அன்றாட உணவுகளில் மணமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரையை நாம் பல வகைகளில் சமையலில் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். இயல்பாகவே இது பசியை தூண்டும் தன்மை உடையது. உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் துணையாக இருக்கிறது. இதில் வைட்டமின்களும், தாது தன்மைகளும் அதிகளவில் உள்ளன. எனவே சட்னியாகவும், பொடியாகவும் அன்றாட உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. பிரியாணியில் மணமூட்டியாக சேர்க்கப்படுவதால் மிகுந்த வாசனை உள்ள உணவாக அது மாறுகிறது.

பல நோய்களுக்குத் தீர்வு

உடல் எடை குறைக்க பெரிதளவில் உதவுகிறது. ஊளைச்சதையால் அவதிப்படுபவர்களுக்கு புதினா ஒரு அருமருந்தாகும். இதை உண்பதால் வயிற்றுப் புழு அழிக்கப்படுகிறது. வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் புதினாவை தினசரி உணவில் சேர்ப்பதினால் அதில் இருந்து விடுபடுவார்கள். அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்களுக்கு புதினா இலையை அரைத்து தலையில் பூசி வருவதால் தலைவலி ஏற்படாமல் தடுக்க முடியும். மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள் இதை உண்பதினால் ஆஸ்துமா மற்றும் மூச்சுக் கோளாறுகளிலிருந்து விடை பெறலாம். வாத நோய், சோகைத் தன்மை, நரம்பு தளர்ச்சி போன்ற சிக்கலான நோய்களிலிருந்தும் காப்பாற்றக் கூடியது. நீண்ட நாட்களாக பல்வலியால் அவதிப்படுபவர்கள் புதினாக் கீரையை நன்றாக மென்று சாப்பிடுவதினால் ஈறுகளில் உள்ள கிருமிகளை அழித்து பற்களை வலுப்பெறச் செய்யும். இடைவிடாத வயிற்றுப்போக்கு இன்னல்களை சந்திப்பவர்கள் துவையல் போல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதினால் உடனடியாக அதன் பலன் கிடைக்கும். நீண்டநாள் பல் பிரச்சனை உள்ளவர்கள் புதினாவை கைப்பிடி அளவு நன்றாக காய வைத்து, தேவையான அளவு உப்பை அதனுடன் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து தூளாக்கிய பின், காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைத்து தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்து போல் பிரகாசமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here