வாடகைத் தாய் மூலம் கிடைத்த குழந்தையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளதாக அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை தாய் மூலம் குழந்தை! – பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி
Latest News
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு – ஜெனிஃபர் லோபஸ் வேதனை
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் மனமுடைந்து போன பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளதாக கூறியுள்ளார்.
இளைஞர் வெறிச்செயல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில்...