திமுக கூட்டணியில் எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் சுமூகமாக இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இன்னும் தொகுதி பங்கீட்டை இன்னும் உறுதி செய்யவில்லை. அதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்; “திமுக கூட்டணியில் மாநில கட்சிகளே இன்னும் தொகுதி பங்கீடு பற்றி பேசி முடிக்கவில்லை. நாங்கள் தேசிய கட்சி என்பதால் பொறுமையாக இருக்கிறோம். ஓரிரு நாட்களில் இனிப்பான செய்தி வரும்.

சுமூகமாக உள்ளது

திமுக கூட்டணியில் எந்தவித பிரச்னையும் இல்லை; சுமூகமாக இருக்கிறது. வதந்திகளை நம்பாதீர்கள். காங்கிரசில் இருந்தபோது விஜயதரணிக்கு உரிய மரியாதை அளித்து, அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. தற்போது பாஜகவில் இணைந்துள்ள அவருக்கு அந்த அங்கீகாரம் எல்லாம் கிடைக்குமா என பார்க்கலாம்”. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here