மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுபரமணியம் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வதந்தி பரவிவந்த நிலையில், அதுகுறித்து எஸ்.பி.பி. மகன் எஸ்.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.

எஸ்.பி.பி. மரணம்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிமை பிற்பகல் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். எஸ்.பி.பி.யின் மறைவுச் செய்தி, திரையுலகிரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சரண் விளக்கம்

இந்த நிலையில், எஸ்பிபியின் சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், அதனை செலுத்துவர்தற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. எஸ்பிபியின் மகன் குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்றும் செய்திகள் பரவியது. ஆனால் இதனை எஸ்.பி. சரண் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், துக்கத்தில் இருந்து மீள்வதற்குள் ஏராளமான புரளிகள் வருவது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். தனது தந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சிரமபட்டதாக ஆதாரமற்ற தகவல் பரப்படுவதாகவும், சிகிச்சைக்கான பணம் வேண்டாம் என மருத்துவமனை கூறியதாகவும் தெரிவித்தார். எஸ்.பி.பி மீதுள்ள அன்பால் மற்றவர் மீது பழிப்போட நினைப்பது வேதனை அளிப்பதாகவும் எஸ்.பி. சரண் தெரிவித்தார்.

அது பிரச்சனை அல்ல

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சரண், தனது அப்பாவின் இறுதிச் சடங்கிற்கு அஜித் வந்தாலும் வராவிட்டாலும் அது எங்களுக்குகான விஷயமல்ல என்றும் அவர் அப்பாவின் மீது அன்பு கொண்டவர் என்றும் கூறினார். அஜித் வந்தாரா? வரவில்லையா? என்பது பிரச்சனை அல்ல. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என்று தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here