போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகைகளின் செல்போன்களில் இருந்து ஆபாச படங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள்

திரையுலகில் போதைப் பொருட்கள் தாராளமாக புழங்குவதாக பரபரப்பான குற்றச்சாட்டுக்குகள் எழுந்த வண்ணம் உள்ளன. தடை செய்யப்பட்ட MDMA போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாகவும், சப்ளை செய்ததாகவும் கூறி பிரபல கன்னட நடிகைகள் ராகினி திவேதி, நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு, பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அதிர்ச்சி தகவல்

ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணியின் செல்போன்களில் போதைப் பொருள் விவகாரம் குறித்த தகவல்கள் ஏதேனும் இருக்குமா என்பதை அறிய, அதனை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக, அந்த செல்போன்களில் அழிக்கப்பட்ட தரவுகளை ரிக்கவரி செய்து போலீசார் ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது. அப்போது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் ஆகியவை இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, சஞ்சனாவின் செல்போனில் பாலியல் தொடர்பான வாட்ஸ்-அப் குரூப் ஒன்று இருந்ததாகவும், சஞ்சனா கைதான பின்னர் அந்த குரூப் கலைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து போதைப் பொருள் விவகாரம் மட்டுமின்றி பாலியல் விவகாரம் குறித்தும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here