கணவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகை பூனம் பாண்டே அளித்த புகாரையடுத்து அவரது கணவர் சாம் பாம்பேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கவர்ச்சி நடிகை

ஒருசில படங்களில் மட்டுமே நடித்த நடிகை பூனம் பாண்டே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை அன்றாட வேலையாக செய்து வருகிறார். சாம் பாம்பே என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த பூனம், அவருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார். அப்போது சாம் பாம்பேவுடன் நெருக்கமாக இருக்கும் பல வீடியோக்களை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டார். கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததையடுத்து, கடந்த 10 ஆம் தேதி இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

நீ ரொம்ப யோகியமா ?

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி இருவரும் ஹனிமூனுக்காக கோவா சென்றுள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை, இருவரும் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும் கணவர் மீது கோவா போலீசில் பூனம் பாண்டே புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது கணவர் சாம் பாம்பேவை கைது செய்துள்ளனர். சாம் பாம்பே கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் பூனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். திருமணமாகி பதினைந்து நாட்கள் கூட ஆகாத நிலையில், இவர் இப்படி புகார் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த செய்தியை கேட்ட இணையத்தளவாசிகள், பூனம் பாண்டேவை கமெண்ட்டுகள் மூலம் சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். இன்னும் சிலர், சாம் பாம்பேவிடம் இருக்கும் பணத்தை பறிக்கவே இவர் இப்படி நாடகமாடுகிறார் என்றும் கூறி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் தற்போது பூனம் பாண்டேவின் பேச்சுதான் ஹாட் டாப்பிக்காக இருந்து கொண்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here