லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் இணையும் ‘எவனென்று நினைத்தாய்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெற்றி நாயகன்

லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். ரிலீஸூக்கு தயாராக இருக்கும் இப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். தியேட்டர்கள் எப்போது திறக்கும், ‘மாஸ்டர்’ படத்தை எப்போது பார்ப்போம் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குள் தனது அடுத்த படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ். ‘எவனென்று நினைத்தாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில், கமல்ஹாசன் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இப்பத்தில் நடிகர் கமல்ஹாசன் புதிய தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யப்போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

புதிய தொழில்நுட்பம்!

கமல்ஹாசன் படம் என்றாலே ஏதாவது ஒரு புதிய முயற்சியும், தொழில்நுட்ப அறிமுகமும் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் ‘எவனென்று நினைத்தாய்’ படத்தில் கமல்ஹாசனின் புதிய தொழில்நுட்பம் குறித்து வெளிவந்த செய்திகள் உண்மையாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரகப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. பிக் பாஸ் சீசன் 4, இந்தியன் 2, எவனென்று நினைத்தாய் என்று வரிசையாக தனது வேலையில் பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here