சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.39,472க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்ற இறக்கம்

2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரையில் ரூ.30 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்த தங்கம் விலை, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. கிட்டத்தட்ட ரூ.43,000 வரை உயர்ந்து வரலாறு காணாத ஏற்றத்தை கண்டது. தங்கத்தின் வரத்து குறைந்ததாலும், பொருளாதார வீழ்ச்சியாலும் தங்கம் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

விலை குறைவு

நேற்று கிராம் தங்கம் ரூ.4,958க்கும், சவரன் தங்கம் ரூ.39,664க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.39,472க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.24 குறைந்து ரூ.4,934க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிலோ ரூ.70 ஆயிரத்திற்கே இன்றும் விற்பனையாகிறது.

கலங்க வைக்கும் விலை

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு சவரன் தங்கம் ரூ.25,000த்தை தாண்டி விற்பனை ஆனது. ஜூன் மாதம் ரூ.26,000மும், ஆகஸ்ட் மாதம் ரூ.27,000 முதல் ரூ.29,000 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here