ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் திருவிழா

ஐபிஎல் போட்டித் திருவிழா இன்று இரவு தொடங்குகிறது. முதல் போட்டியில் ‘தல’ தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் வருகிறார்களோ இல்லையோ, மைதானத்தில் அவர் நிற்பதைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடர்களில் அதிகளவு சாம்பியன்ஷிப் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் போட்டியில் இன்று நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. கடந்த 2019ம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியின் இறுதி பந்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது அணிக்கு கோப்பையை உறுதி செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 4 முறை ஐபிஎல் இறுதி போட்டிகளில் மோதியுள்ள நிலையில், அதில் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 1 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளது.

ரசிகர்கள் நம்பிக்கை!

தற்போது நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னனி கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எல்லோரும் கொண்டாட முக்கியக் காரணம், நமது கூல் கேப்டன் ‘தல’ தோனி தான். அணியை எப்படி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்ற தோனியின் முன்கணிப்பு தான், ரசிகர்கள் இந்த அளவிற்கு கொண்டாட காரணம்.

CSK vs MI

இந்த கூல் கேப்டனை கவுரவப்படுத்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறது. போட்டிக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களுக்கும் விருந்து கொடுத்த நிர்வாகம், தோனிக்கு கோல்டன் கலரில் புதிய வடிவமைப்பிலான தொப்பி ஒன்றை பரிசு அளித்திருக்கிறது. அதைப் பார்த்ததும் தோனி செம ஹேப்பி ஆகி விட்டாராம். ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு தங்க நிற வாள் பரிசளித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். இதேபோல மற்ற வீரர்களுக்கும் பரிசுகள் அளித்து, ஐபிஎல் போட்டியில் ஊக்கத்துடன் விளையாட உற்சாகம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ‘தல’ தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – ரோஹித் ஷர்மாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. பரபரப்பாக நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here