‘கோவில்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மீண்டும் கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

‘மாநாடு’

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த வேளையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்ததைதொடர்ந்து மீண்டும் அப்படத்தின் ஷீட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ‘மாநாடு’ திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்பட்டதற்கு, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்தார்.

மீண்டும் கிராமத்து கதை!

‘மாநாடு’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சாக்லேட் பாயாக நடித்துக் கொண்டிருந்த சிம்பு, ‘கோவில்’ படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்பொழுது சுசீந்திரன் இயக்கி வரும் படத்தில், ஜெய் ஹீரோவாகவும், திவ்யா துரைசாமி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிறகு சிம்புவுடன் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் படத்தில் இணைய போவதாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், தற்போது சுசீந்திரனுடன் இணையப் போவதாக தகவல் பரவி வருகிறது. ஊரடங்கு சமயத்தில் தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு, தனது உடல் எடையை கணிசமாக குறைத்து ஃபிட்டாக இருக்கிறார் சிம்பு. அவர் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here