தன்னை கேலி, கிண்டல் செய்பவர்களை பற்றி துளியும் கவலை இல்லை என்று நடிகை ஜூலி கறாராக தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவராலும் கவனிக்கப்பட்டவர் ஜூலி. ஒரு பெண்ணாக இருந்து தைரியமாக போராட்டத்தில் இறங்கிய அவரை, எல்லோரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால் ஜூலியின் போறாத நேரமோ என்னவோ, பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன், அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜூலி, பல பொய்களை சொல்லியது, என்ன கிடைக்கும் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்தது போன்றவை ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து ஜூலியை போலி என்று விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் பிக் பாஸ் முடிந்த பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

கவலை இல்லை

ஜூலி பல படங்களை கைவசம் வைத்திருந்தாலும், ஒன்று கூட இன்னும் வெளிவரவில்லை. அன்றாடம் பல போட்டோ ஷூட் என்று பிஸியாக இருக்கும் ஜூலியை, அனைவரும் கலாய்த்து வந்தனர். ஆனால், கிண்டலும், கேலியையும் எண்ணி முதலில் மிகவும் வருத்தப்பட்ட ஜூலி, இப்பொழுது கொஞ்சம் பக்குவம் அடைந்துவிட்டார். தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார் ஜூலி. போட்டோ ஷூட்ஸ்க்கு ரெடி ஆகும் வீடியோவையும், அதற்கு அழகான கேப்ஷனும் கொடுத்து பத்திவிட்டு உள்ளார் . இதுதொடர்பாக ஜூலி தெரிவிக்கையில்; கேலி செய்பவர்கள், கேலி செய்வார்கள். ஆனால் வெற்றியாளர்கள் முன்னேறிச் சென்றுவிடுவார்கள். இறுதியில் இது கேலி செய்யப்படும் என்று நாங்கள் அறிவோம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. இவர்களைப் பொறுத்தவரை அடுத்தவரை கேலி செய்ய வேண்டும், அவ்வளவு தான். ஆனால் இதை செய்தோம், நிரூபித்தோம் என்பதில் எங்களுக்கு அதிக பெருமை உள்ளது. இவ்வாறு ஜூலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here