உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகரும், வழக்கறிஞருமான துரைப்பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.

குணசித்திர நடிகர்

பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த துரைப்பாண்டியன், விக்ரமின் ‘ஜெமினி’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இவர் அதிமுக வழக்கறிஞர் பிரிவிலும் இருந்து வந்துள்ளார். மேலும் குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகும் பிரபல கிரிமினல் வழக்கறிஞரும் ஆவார்.

மரணம்

கடந்த சில மாதங்களாக நுரையீரல் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த துரைப்பாண்டியனுக்கு, நேற்று முன்தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். துரைப்பாண்டியனின் மறைவு செய்தியைக் கேட்ட வழக்கறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here