தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியாமணி தற்போது திகில் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தேசிய விருது வென்ற ‘முத்தழகு

மாடலிங் என்ற துறையை தன் பள்ளி பருவத்திலேயே துவங்கிய பிரியா வாசுதேவ் மணி என்கிற பிரியாமணி, அதே வயதில் சினிமாவிலும் நடிக்க வந்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்த அவர், பாலிவுட் பக்கமும் சென்றார். திரையுலக வாழ்க்கையை தெலுங்கு சினிமாவில் துவங்கிய பிரியாமணி, தமிழில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பின்னர் இவர் நடித்த ‘பெல்லைனா கொத்தாலு’ என்ற தெலுங்கு திரைப்படம் ஹிட் ஆக, வரிசையாக மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன்பின், தமிழில் பிரியாமணி நடித்த ‘பருத்திவீரன்’ திரைப்படம், அவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்தது. இப்படத்தில் தான் நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் கார்த்தி அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் பிரியாமணியின் ஆகச்சிறந்த நடிப்பால், அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு விருதும் வழங்கப்பட்டது. பின்னர்பல கன்னட மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் அதிகம் நடித்தார் பிரியாமணி.

திகில் திரைப்படம்

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரியாமணி, சிறிது காலம் சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கும் பிரியாமணி, ‘திகில்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு ‘கொட்டேஷன் கேங்க்’ என்று பெயர் வைத்துள்ளனர். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தாதாக்கள், ரவுடிகளை பற்றிய படமாக இப்படம் தயாராகிறது. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இப்படத்தை இயக்குகிறார். இதில் தன்யா, ரபியா, விஷ்ணு வாரியர், அக்‌ஷயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ‘கொட்டேஷன் கேங்க்’ படம் தயாராகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here