தமிழ் பட நடிகை ஒருவர் துளசியுடன் கஞ்சாவை ஒப்பிட்டு பேசியதற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராக கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

போதைப் பொருள்

திரையுலகில் போதைப் பொருட்கள் தாராளமாக புழங்குவதாக பரபரப்பான குற்றச்சாட்டுக்குகள் எழுந்த வண்ணம் உள்ளன. தடை செய்யப்பட்ட MDMA போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு உள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், பாலிவுட்டையும் போதைப் பொருள் விவகாரம் உலுக்கி வருகிறது. நடிகை ரியா சக்ர போர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவரின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சர்ச்சை பேச்சு

இந்த நிலையில் கன்னட நடிகை நிவேதிதா, கஞ்சாவுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில்; “துளசியைப் போல் கஞ்சா மருத்துவ குணம் கொண்டது. இதனை தடை செய்வதற்கு முன்பு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். இதை தடை செய்ததற்கு பின்னால் பெரிய சதி இருக்கிறது. 40 நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்துகிறார்கள். எனவே இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். நடிகை நிவேதிதாவின் இந்த பேச்சுக்கு எதிராக பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அவரை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நடிகை நிவேதிதா தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here