போதைப் பொருள் சப்ளை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையும், நடிகையுமான சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் விவகாரம்

தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், மருந்துகள் பயன்படுத்தியதாக கூறி நடிகை ராகினி திவேதியை போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியரான ரவிசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ராகினி திவேதி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் மீது போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நடிகை சித்தாபுராவில் உள்ள மகளிர் பாதுகாப்பகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த கைது

போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும், நடிகையுமான சஞ்சனா கல்ராணிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், பெங்களுருவில் உள்ள சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பலமணி நேரம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு, நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரையுலகில் போதை மருந்து புழக்கம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், திரையுலகினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here