தானும் சிங்கிள் தான் எனக் கூறியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா சிங்கிளாக இருப்பதே தனக்கு பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

வளரும் நடிகை

கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘தேவதாஸ்’ போன்ற படங்களில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘புஷ்பா’ படத்தில் நடிக்கிறார். தற்போது தமிழில் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து, பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.

சிங்கிள் தான் பெஸ்ட்

சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ராஷ்மிகா மந்தனா, அவ்வப்போது தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர், கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “நானும் சிங்கிள் தான். எனக்கு அது பிடித்திருக்கிறது. சிங்கிளாக இருப்பது குறித்து வருத்தப்படுபவர்களுக்காக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நம்புங்கள், சிங்கிளாக இருப்பதை ரசிக்க தொடங்கிவிட்டால், உங்கள் காதலருக்கான மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here