மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக வெளியான செய்திகளுக்கு பிரபல பாடகி பிரகதி டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

மதுவுக்கு அடிமை?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றவர் பாடகி பிரகதி. 2012ம் ஆண்டு பாலா இயக்கிய வெளியான ‘பரதேசி’ படத்தில் இரு பாடல்கள் பாடியுள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’, ‘கண்ணே கலைமானே’ படங்களிலும் அவர் பாடியுள்ளார். இந்நிலையில் பாடகி பிரகதி மதுவுக்கு அடிமையாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகன.

விளக்கம்

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரகதி, டுவிட்டரில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; அயர்லாந்தில் உள்ள கின்னஸ் ஃபாக்டரிக்குச் சென்றபோது ஒரு பீர் கிளாஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதை வைத்து நான் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோன்ற செய்திகளை வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்கள். ஆனால் அந்தளவுக்கு அவற்றுக்கு மதிப்பு கிடையாது. என்னுடைய, உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். இவ்வாறு பிரகதி கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here