‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆல்யா மானசா சிறிது காலம் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

காதல் திருமணம்

ராஜா ராணி தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரியவந்தது. சமீபத்தில் ஆல்யா – சஞ்சீவ் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார் ஆல்யா மானசா.

மீண்டும் சீரியல்

கர்ப்பமாக இருந்த போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார் ஆல்யா. இதனால் மீண்டும் பழைய உடல் எடைக்கு மாறி அவர் மீண்டும் சீரியல்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், கடும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுடன் இருந்து, எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் பழைய செம்பாவாகவே மாறினார். இதனையடுத்து புதிய சீரியல் ஒன்றின் படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிய அடையச் செய்ததுடன், அவரது புதிய சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here