சித்துவும், ஷிவானி நாராயணனும் சமூக வலைத்தளங்களில் ஒருவரையொருவர் மாறி மாறி பிளாக் செய்துகொண்டது சீரியல் நடிகைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப குத்துவிளக்கு

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து பிரபலமான சித்து, பல நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அன்றாடம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குடும்ப குத்துவிளக்கு போல் அழகான புடவைகளில் புகைப்படங்களை பதிவிடுவது, மாடர்ன் உடைகளாக இருந்தாலும் அதில் கவர்ச்சி இல்லாதவாறு புகைப்படத்தை வெளியிட்டு கொண்டிருக்கும் சித்ராவுக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான சித்து, தற்போது சீரியல் நடிகைகளில் முன்னணியாகவே இருந்து வருகிறார். அதிலும் அவர் நடித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் பெருமளவு ரசிகர்களை பெற்றுள்ளது. எந்த ஒரு வம்பு தும்புகளிலும் மூக்கை நுழைக்காமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து கொண்டிருந்த சித்துவை உசுப்பேத்தி விட்டனர் ரசிகர்கள். வெள்ளித்திரை நடிகைகளின் சண்டை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது சின்னத்திரை நடிகைகளின் சண்டை தொடங்கிவிட்டது.

கவர்ச்சி புகைப்படம்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்து எந்த அளவிற்கு குடும்ப பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரோ, அதற்கு நேர்மாறாக ‘பகல் நிலவு’ ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டு இருப்பார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக, சித்ராவிடம் ஏதாவது கிளாமர் புகைப்படங்கள் இருந்தால் போஸ்ட் செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த சித்ரா, கிளாமர் புகைப்படங்கள் வேண்டும் என்றால் என்னுடைய இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள், 2000 ஆம் ஆண்டு பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு செல்லுங்கள் என கமெண்ட் போட்டுள்ளார். சித்ரா எதார்த்தமாக சொல்லப்போக, சித்ராவின் கமெண்டுக்கு அவரது ரசிகர்கள் ஷிவானியை தானே சொல்றீங்க என பெயரை பதிவிட்டு கேட்டது, சமூக வலைத்தளங்களில் பெருமளவு பரவியது. இதைக் கேட்ட ஷிவானி கடுப்பாகிவிட்டார்.

முற்றியது சண்டை

இதற்கு, நடிகை ஷிவானி யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக கமெண்ட் போடுவது போல், “மற்றவர்களைப் பற்றி பேசும் முன் கூன் முதுகை பார் என்றும் என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் என் ரசிகை தான் என்றும் சில கொச்சையான வார்த்தைகளையும் சேர்த்து” தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமைதியாக இருக்கும் நடிகைகளுக்கு இடையே சண்டை போடும் விதமாக பிரச்சனைகளை பத்த வைத்துவிட்டனர் நெட்டிசன்ஸ். சித்து, ஷிவானிக்குள் பிரச்சனை மேல் பிரச்சனை ஓடிக்கொண்டே இருந்த நிலையில், தற்போது இருவரும் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டு, பிளாக் செய்து விட்டார்களாம். எதார்த்தமாக ஒரு ரசிகர் கேட்க போய் இப்படி பெரிய பிரச்சனை ஆகிவிட்டதே என்றும், உங்களுக்குள்ள என்ன தான் பிரச்சனை என்றும் சித்துவை நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here