பூங்கா ஒன்றில் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடியதாக பிரபல நடிகையை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம் நடிகை

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து வருகிறார். இதற்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.

தாக்குதல்?

இந்த நிலையில், பூங்கா ஒன்றில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள், சம்யுக்தா ஹெக்டேவின் உடை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. பின்னர் சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார். நடிகையை பொதுமக்கள் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏறோடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here