ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனை நெட்டிசன்ஸ் கலாயித்து வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படங்கள்

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை போட்டு சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில், ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே சமூக வலைத்தள பக்கம் தலையை நீட்டுவார்கள் சில முன்னணி நடிகைகள். அந்த வரிசையில், அத்தி பூத்தாற்போல புகைப்படங்களை வெளியிடும் முக்கிய நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. நேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா, அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பெருமூச்சுவிட வைத்துள்ளார். ஓணம் புடவையுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வீட்டில் இருக்கும் விதவிதமான புகைப்படங்களை இருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

எப்பொழுதும் நயன்தாராவை புகழும் ரசிகர்கள், இயக்குநர் விக்னேஷ் சிவனை கலாய்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல் தான் இந்த முறையும் நடந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் “செமயா வாழ்ற மேன் நீ”, “ரொம்ப லக்கி மேன் நீ”, “எப்பவுமே நயன்தாராவுடன் சுத்திகிட்டு இருந்தா எப்படி அப்பப்போ படம் எடுக்க வேண்டாமா” என்று பல வகையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒன்னா சாப்பிடு வாங்கலாம், ஒன்னா இருப்பாங்கலாம், ஒரே ஃபிளைட்ல போவாங்கலாம் ஆனா இன்னும் கல்யாணம் மட்டும் பண்ணிக்கிளையும் என்னமா இப்படி கதை விடுறீங்க என்று கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் திருமணம் செய்துகொள்ளாத விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒன்றாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here