பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை ஒருவர் ரூ.1 கோடி கேட்டதற்கு பிக் பாஸ் டீம் ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்க இருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் பணி ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அப்பணிகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனம் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான புரொமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதிர்ந்த விஜய் டிவி

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை ஷில்பா மஞ்சுநாத் ரூ.1 கோடி பணம் கேட்டதாக தெரிகிறது. ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இதனால் அவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனை அறிந்த பிக் பாஸ் டீம், ஷில்பாவை அணுயுள்ளது. ஆனால், விஜய் டிவியிடம் ஒரு கோடி கேட்டு அதிர்ச்சியடைய செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது ஷில்பா மஞ்நாத் கேட்ட ரூ.1 கோடி பணத்துடன் பிக்பாஸ் குழு அணுகி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க கூறியுள்ளனர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக ஷில்பா முடிவெடுத்துள்ளாராம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here