“தனி ஒருவன்” திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆனதை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.

நல்ல வரவேற்பு

ஒரு நல்ல கதையுடன் படம் இருந்தால் ரசிகர்களிடத்தில் அந்தப் படத்திற்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களை இரண்டாம் பாகம் எடுப்பதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சில இயக்குநர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும், பலருக்கு இரண்டாம் பாகம் வெற்றியாகவே அமையும். 2015 ஆம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து மெகா ஹிட் படமான “தனி ஒருவன்” திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ஹீரோ, ஹீரோயினை விட, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரொமாண்டிக் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அரவிந்த் சாமிக்கு இது ஒரு வித்தியாசமான படமாகவே அமைந்தது. இப்படம் வெளியாகி ஐந்து வருடம் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதன் போஸ்டரை பதிவிட்டு #5yrsofthanioruvan என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கினர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

“தனி ஒருவன்” படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். “தனி ஒருவன்” வெற்றியை ரசிகர்களும், நண்பர்களும் கொண்டாடுவதை பார்த்த மோகன் ராஜாவும், அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் விரைவில் வெளிவரும் என டுவிட்டரில் பதிலளித்துள்ளார். “தனி ஒருவன் 2” கண்டிப்பாக ஜெயம் ரவிக்கும் மோகன்ராஜாவிற்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. முதல் பாகத்தில் நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் ஜோடி சேரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here