ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்க இருந்த படம் அடுத்த வருடத்திற்கு தள்ளி போடப்பட்டுள்ளதாக பாலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

பிளாக் பஸ்டர் படங்கள்

விஜய்யின் ‘பிகில்’ படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என்று இவர் இயக்கிய அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும் விஜய் ரசிகர்களும் அட்லீயை கொண்டாடத் துவங்கினர். ஷாருக்கானை வைத்து படம் இயக்கினால் பாலிவுட்டிலும் இவர் முன்னணி இயக்குநராக வலம் வருவார் என்று ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். பாலிவுட்டில் ஒரு முன்னணி ஹீரோவை வைத்து அட்லீ படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வந்த நிலையில், தற்போது அந்தப் படம் அடுத்த வருடத்திற்கு மாறிவிட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், அட்லீ கதைகளில் சில மாற்றங்களை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதான் காரணம்!

நடிகர் ஷாருக்கான் தற்போது யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறியுள்ளாராம். இந்தப் படம் முடிவுபெற்ற பிறகே, அட்லீயுடன் கூட்டணி சேரப் போகிறார் என்று தெரிகிறது. லாக்டவுன் சமயத்தில், அட்லீ கதைகளை பாலிவுட்டுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் ஷாருக்கான், சித்தார்த் ஆனந்த் இணையும் படத்தை தயாரிக்க உள்ள யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பிற்கு, இது ஐம்பதாவது படமாகும். எனவே இப்படம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஷாருக்கானை நடிக்க கேட்டதாக தெரிகிறது. மேலும் தனக்கு இது ஒரு நல்ல படமாக அமையும் என்ற காரணத்தினால் நிராகரிக்க முடியாத சூழ்நிலையில் ஷாருக்கான் அதில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும், அதனால் அட்லீ படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here