நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குழந்தை பிறக்கப் போகிற சந்தோஷ செய்தியை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அனுஷ்கா ஷர்மா. ஷாருக் கானுடன் “ரப்னே பனாதி ஜோடி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான அவர், நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் விளங்கினார். கடந்த 2017ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலியை அனுஷ்கா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கடைசியாக 2018ஆம் ஆண்டு ஜீரோ என்ற திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார். பிறகு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதேசமயம் அமேசன் பிரைமில் வெளியான ‘பாதாள் லோக்’ வெப்சரீஸ் மற்றும் நெட்பிலிக்சில் வெளியான ‘புல் புல்’ திரைப்படம் ஆகியவற்றை அனுஷ்கா தயாரித்தார். பாதாள் லோக் வெப்சீரிஸ் இந்து மத கடவுள்களை அவமதிப்பதாக சர்ச்சைகள் எழுந்த போது, அனுஷ்கா ஷர்மா விராட் கோலியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அம்மாவாக போகிறார்!

இந்த நிலையில், அனுஷ்கா சர்மா விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நாங்கள் மூன்று பேர் ஆகப்போகிறோம், சீக்கிரமே அம்மாவாக போகிறேன் என்று சந்தோஷம் செய்தியையும், ஜனவரியில் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவைப் பார்த்த சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் ரசிகர்களும் விராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விராட் கோலியின் ரசிகர்கள் ஒரு பக்கம் லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் அள்ளிக் குவிக்க, அனுஷ்காவின் ரசிகர்கள் ஒரு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். குட்டி கோலி? பிறக்கப் போகிறாரா அல்லது குட்டி அனுஷ்கா? பிறக்கப் போகிறாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here