பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் வழக்கில் நாளுக்கு நாள் புதுப்புது திருப்பங்களும், ரியா மீதான குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

விலகும் மர்மம்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் நாளுக்கு நாள் மர்மங்கள் வெளிவருவதும், பல சர்ச்சைகள் கிளம்புவதுமாகவே இருக்கிறது. சுஷாந்த் சிங் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகத்தில் இருந்து கொண்டிருக்கும் வேலையில், பல ஆதாரங்கள் சுஷாந்தின் காதலியான ரியாவிற்கு எதிராகவே இருக்கிறது. சமீபத்தில் ரியாவின் செல்போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ் அப் சாட்டில், அவர் போதை கும்பலுடன் பழக்கம் வைத்திருந்ததாகவும், போதை மருந்தை தினமும் சுஷாந்திற்கு கலந்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைதொடர்ந்து தற்போது புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது, சுஷாந்தின் கிரெடிட் கார்டு பின் நம்பரை ரியா சக்ரபோர்த்தி மாற்ற முயன்றது அம்பலமாகியுள்ளது. சுஷாந்த் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டாவுக்கு இடையிலான உரையாடல் வெளியாகி உள்ளது. அதில் நீங்கள் சிறிய அட்டையின் ரகசிய குறியீட்டு எண்ணை அனுப்ப முடியுமா? நாம் நெட் பேங்கிங் எண்ணை மாற்றலாம் என மிராண்டாவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும் ரியாவிற்கும் சுஷாந்தின் வீட்டு வேலைக்காரர் தீபேஷ் சாவந்த்திற்கும் போதை மருந்து கலந்து கொடுத்ததில் தொடர்பு உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

கைது செய்யப்படுவரா?

நாளுக்கு நாள் புதுப்புது திருப்பங்களுடன் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள். அவை அனைத்தும் ரியா சக்ர போர்த்திக்கு எதிராக இருக்கும் சூழலில், ரியா மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரியா வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, ஜூன் 8ம் தேதி, அப்பார்ட்மெண்டில் உள்ள சுஷாந்தின் வீட்டில் இருந்த 8 ஹார்ட் டிரைவ்கள் அழிக்கப்பட்டதாக சுஷாந்தின் நண்பர் சிபிஐக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் ரியா வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பு சுஷாந்த்தும், ரியாவும் சண்டை போட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நாள்தான் சுஷாந்தின் மேனேஜரான திஷா சாலி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் ரியாவிற்கு எதிராக இருப்பதால், சுஷாந்தின் ரசிகர்கள் பெருமளவில் கோபத்தில் உள்ளனர். சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்படுவரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here