சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவை புகழ்ந்து தள்ளிய நடிகை மீரா மிதுன் அவர் உருவாக்கியதாக கூறப்படும் ‘கைலாசா’ நாட்டுக்கு விரைவில் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்ச்சை நடிகை

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை மீரா மிதுன், சர்ச்சைக்கு பெயர் போனவர். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த், விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த அவர், விஜய் மனைவி சங்கீதாவையும், சூர்யா மனைவி ஜோதிகாவையும் தரக்குறைவாக பேசினார். இதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விஜய் மற்றும் சூர்யாவின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மீரா மிதுனை வெளுத்து வாங்கினர். மேலும் உருவ பொம்மையை எரித்ததுடன், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

நித்திக்கு பாராட்டு

இந்நிலையில், ‘கைலாச’ நாட்டின் நாணயத்தை வெளியிட்ட நித்யானந்தாவை பாராட்டியும், புகழ்ந்தும் தள்ளியுள்ளார் மீரா மிதுன். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “அனைவரும் அவரை கேலி செய்தார்கள். அனைவரும் அவரை தவறாக பேசினார்கள். அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் அவரோ ‘கைலாசா’ எனும் புதிய நாட்டையே உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சை சாமியாரை, சர்ச்சை நடிகை பாராட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here