பிக்பாஸ் புகழ் ஆரவ்க்கும், நடிகை ராஹீக்கும் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிக் பாஸ் புகழ்

2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ், அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸில் பங்கேற்பதற்கு முன்பாகவே, ஓ காதல் கண்மணி மற்றும் சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது ஆரவ்க்கும், நடிகை ஓவியாவிற்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை என்றதும், ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வெளிவந்தன. தன் மீது காதல் வயப்பட்டு கொண்டிருந்த ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்றவுடன், ஓவியாவுக்கு முத்தம் கொடுத்தது பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அந்த முத்தத்திற்கு மருத்துவ முத்தம் என்றும் பெயர் வைத்தனர். ஆரவ்விடம் காதலைப் பற்றி கேட்கும் போதெல்லாம், நானும் ஓவியாவும் நண்பர்கள் தான், நாங்கள் காதலிக்கவில்லை என்றும், என் முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது என்றும் தட்டிக் கழித்தார்.

திருமணம்!

இந்நிலையில், நடிகர் ஆரவ், ராஹீ என்ற நடிகையை நீண்ட காலமாக காதலிப்பதாகவும், அடுத்த மாதம் 6ஆம் தேதி அவர்களுக்கு திருமணம் நடைபெறப் போவதாகவும் வெளியான செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெறப் போவதாகவும், கொரோனா பிரச்சனை தீர்ந்தவுடன் திரையுலகினர் அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணச் செய்தியை கேட்ட ரசிகர்கள், இந்த காதல் விவகாரம் ஏற்கனவே ஓவியாவிற்கு தெரிந்துவிட்டது போல, அதனால் தான் டுவிட்டரில் திருமணத்தை பற்றி எப்பொழுதும் ஒரு மாதிரியாகவே விமர்சனங்களை போட்டு வருகிறார் என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here