மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கலந்து கொடுத்ததாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

பல மர்மங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்த நாள் முதல் இன்று வரை தினம் தினம் புதுப்புது தகவல்களும், புதுப்புது செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. மும்பை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுஷாந்த் மரணம் தொடர்ந்து சர்ச்சையில் இருப்பதாகவும், அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகும் சுஷாந்தின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மருந்து

மும்பை போலீசார் விசாரித்து வந்த சுஷாந்த் வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா, அவருக்கு தினமும் டீயில் போதை மருந்து கலந்து கொடுத்ததாகவும், போதை மருந்து கும்பலுக்கும் ரியாவிற்கும் இடையேயான டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பாலிவுட்டில் ஒரு பரபரப்பான செய்தி நிலவி வருகிறது. ரியாவின் செல்போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோக்களும், மெசேஜ்களும் தற்போது கண்டுபிடித்து எடுக்கப்படுகின்றது. நடிகை ரியா, யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டுள்ளார். யாருடன் எத்தனை மணி நேரம் பேசியுள்ளார் என மொத்த ஆதாரத்தையும் சிபிஐ தோண்டித் துருவி விசாரித்து வருகிறது. சுஷாந்திற்கு போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சியான தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 4 சொட்டுக்கள் போதைப் பொருளை காபியிலோ அல்லது டீயிலோ கலந்து கொடுக்க வேண்டும் என்று ரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ள வாட்ஸ்அப் தகவல் பாலிவுட்டில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதி வேண்டும்

சமீபகாலமாக சுஷாந்தின் மரணத்தில் ரியாவிற்கு முக்கிய பங்கு இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரமும் ரியாவுக்கு எதிராக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் #RheaDrugChat என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை அது கொலை தான் என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும், சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இந்தக் கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here