தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர், தனது அழகான சிரிப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவர், தோட்ட வேலைகள் செய்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது என பொழுதை கழித்து வருகிறார்.

வில்லி கேரக்டர்!

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு வில்லி கேரக்டரில் நடிக்க ஆர்வம் உள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சமந்தா மேலும் கூறுகையில்; “கவர்ச்சியாக நடித்தால் அதற்குதான் பொருத்தம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நான் வந்த புதிதில் வணிக படங்களில் நடித்தேன். கடவுள் அருளால் அவை வித்தியாசமான கதைகளாகவும், நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன. எனக்கு வில்லியாக நடிக்க ஆர்வம் உள்ளது. பேமிலி மேன் என்ற வெப் தொடரில் வில்லி வேடம் கிடைத்துள்ளது. இது எனது கனவு கதாபாத்திரம் ஆகும். திருமணம் ஆன பிறகும் எனக்கு வித்தியாசமான கதைகளும், ரசிகர்களின் பாராட்டும் கிடைக்கிறது. இப்போது சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.” இவ்வாறு சமந்தா தெரிவித்திருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here