பிரபல நடிகை ஓவியாவின் டுவீட்டை பார்த்த ரசிகர்கள் அவர் மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் மூலம் பிரபலம்

‘களவானி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகான ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். பிக் பாஸில் தன்னுடைய நேர்மையான பேச்சு, வெளிப்படையான குணத்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஓவியா ஆரவ்வை காதலித்ததாக கூறப்படுகிறது. முதலில் அவரது காதலை ஏற்றுக்கொண்ட ஆரவ், பின்பு மற்ற சில போட்டியாளர்களின் பேச்சை கேட்டு தவிர்க்கத் துவங்கினார். ஒரு நிலையில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின் சகஜ நிலைக்கு திரும்பிய ஓவியா மன உளைச்சலில் இருந்து வெளியேறிவிட்டதாகக் கூறி திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியானார்.

மீண்டும் காதல்

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், வெளியே வந்ததும் அவர்கள் பழகி வந்தனர். மேலும் இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றியதால் இவர்களுக்குள் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ் கொண்டாடிய தனது பிறந்தநாள் விழாவில் ஓவியா கலந்துகொண்டார். அப்போது ஆரவ்வுடன் ஓவியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் அவ்வப்போது ஆரவ் மற்றும் ஓவியா தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணைய தளங்களில் வைரலானது. இந்த நிலையில், ஓவியா தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் விலகிப் போவதில்லை, நமக்கு தெரியாமல் அவர்கள் நம்மை பின் தொடர்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் எப்போதும் நம் அருகிலேயே இருப்பதாகவும், மிகவும் நேசிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். ஓவியாவின் இந்த டுவிட்டை பார்த்த ரசிகர்கள், அவர் மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here