பழம்பெரும் நடிகை மனோரமாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இளம் நடிகை

‘காக்கா முட்டை’ படத்தில் 2 சிறுவர்களுக்கு தாய் வேடத்தில் துணிச்சலாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் தேசிய விருதும் பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தர்மதுரை, வடசென்னை, செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்து வெளிவர இருக்கும் ‘பூமிகா’ திரைப்படத்தில் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார் ஐஸ்வர்யா. இப்படத்தில் நடித்தது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம்.

பயோபிக்கில் நடிக்க ஆசை

பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், பூமிகாவும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது. இரவு, பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளோம். வரலாற்று படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக, மனோரமாவின் பயோபிக் படத்தில் நடித்து தேசிய விருது பெற வேண்டும் என்பது எனது ஆசை. இது நிறைவேறினால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.” இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here