தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பரிகார பூஜைக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நயன்தாரா, பிரபுதேவா காதல்

தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி கொண்டார் நயன்தாரா. மேலும், மதம் மாறி பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான். தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக நயன்தாரா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தை கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் உள்ளது. ரசிகர்கள் அவ்வபோது இவர்கள் திருமணம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏதேனும் கிடைத்தால்கூட அதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பெரிதாக்கிவிடுவார்கள். அந்த செய்திகளுக்கு இருவர் தரப்பிலிருந்தும் மறுப்பு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஊரடங்கில் முழுமையான தளர்வு ஏற்பட்டதும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் வைத்து கோவிலில் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கிறது என்று செய்திகள் பரவியது. எப்போதும்போல் இதுவெறும் செய்தியாக மட்டுமே முடிந்துவிடாமல், திருமணம் கட்டாயம் நடந்தே தீரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

காத்திருக்கும் நயன்

தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, அடுத்து ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஊரடங்கு முடிந்தபின் இப்படங்களின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்கள் முடிவதற்குள் 2021ம் ஆண்டும் முடிந்துவிடும் என்பதால், திருமணத்தை எப்போது நடத்தலாம் என்ற கேள்வியுடன் ஜோதிடரை குடும்பத்தினர் அணுகியுள்ளனர். அதற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக திருநாகேஸ்வரம் சென்று பரிகார பூஜை செய்து வந்தால் திருமணம் நிச்சயம் என்று கூறியதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கில் கோயில் தரிசனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு முடிந்தபின் அவர்கள் தரிசனம் செய்யக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்பிறகு திருமண அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here