நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த பழைய பதிவுகள் அனைத்தையும் திடீரென நீக்கியுள்ளார்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகைகள் பலர், தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவ்வபோது புதுப்பட அப்டேட்கள், செல்பி புகைப்படங்கள், டிக்டாக் வீடியோக்கள் என்று ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக பல பதிவுகளை பதிவேற்றி வருவர். அதனை பார்க்கும் ரசிகர்களும், அவர்களது பதிவுகளுக்கு லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் கொடுத்து நடிகர், நடிகைகளை உற்சாகப்படுத்தி வருகின்றர். முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷாவை, இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் ரசிகர்களும், டுவிட்டரில் 5.2 மில்லியன் ரசிகர்களும் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். எப்பொழுதும் அவர் பதிவிடும் புகைப்படத்திற்கும், டிக் டாக் வீடியோவிற்கும் ரசிகர்கள் லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஒவ்வொரு பதிவிற்கும் 3 லட்சம் லைக்குகளைக்கு மேல் அள்ளிக் குவிக்கும் திரிஷா, திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் பழைய வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார்.

அனைத்தும் டெலிட்

மற்ற நடிகைகள் சமூக வலைத்தளபக்கத்தை ஒரு விளம்பரப் பொருளாகவே ஆகவே பயன்படுத்துகின்றனர். ஆனால் நடிகை திரிஷா அப்படி செய்யாமல், அவரது புகைப்படத்தையும், டிக் டாக் வீடியோக்களையும் மட்டுமே பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஒரு நாளைக்கு பல புகைப்படங்களை விதவித கோணத்தில் போட்டுக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில், முக்கியமான பதிவை மட்டுமே பதிவேற்றி வருவார் திரிஷா. இந்த நிலையில், திடீரென புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர். உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? என்று பல கேள்விகளை கேட்டு நச்சரிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் தன்னுடைய கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும் தற்போது அனைத்து விஷயங்களையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக பதிவிட்டு வருவதாகவும் திரிஷா விளக்கியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here