அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடேனை தேர்வு செய்து ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிபர் வேட்பாளர் அறிவிப்பு

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட ஜோ பிடேனை தேர்வு செய்து ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தவறான அதிபர்

ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்து ஜோ பிடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, அதிபர் டிரம்ப் ஒரு  மிகத் தவறான அதிபர் என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும் குழப்பங்களை விளைப்பவர் என்றும் அவர் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here