விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் ஜோதிகா நடிக்க மறுத்ததற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

‘மெர்சல்’

விஜய், அட்லி கூட்டணியில் 2017 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த திரைப்படம் மெர்சல். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்தது. விஜய் மூன்று வேடங்களில் நடித்த இப்படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என்று மூன்று முன்னணி கதாநாயகிகள் இடம்பெற்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து மிரட்டினார். சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை தெளிவாக இப்படத்தில் காட்டியிருப்பதால், அனைவர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் நித்யா மேனனின் கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. சின்ன சின்ன காட்சிகளில் நித்யா மேனன் தோன்றினாலும், அவர் பஞ்சாபி பெண்ணாக நடித்து அசத்தியது அனைவரையும் பெருமளவு ஈர்த்தது.

இதுதான் காரணம்

திருமணத்திற்கு பிறகு, முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதையும், டூயட் ஆடுவதையும் தவிர்த்துக் கொண்டு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. சமூக அக்கறையோடு நல்ல கருத்துக்களை விதைக்கும் திரைப்படங்களை ஜோதிகா தேர்ந்தெடுத்து நடித்து வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது. அதிலும் 36 வயதினிலே, ராட்சசி, பொன்மகள் வந்தாள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘மெர்சல்’ படத்தில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஜோதிகாவை அணுகியதாகவும், ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதனால் ஜோதிகா மீது விஜய் ரசிகர்களும் சங்கடத்தில் இருந்தனர். தற்போது அதற்கான உண்மையான காரணம் வெளிவந்துள்ளது. அட்லி கதை சொல்லும்போது ஜோதிகாவிற்கு “அந்த கதைப் பற்றி சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. மேலும், அந்த கதாபாத்திரத்தின் மீது இருந்த வேறுபாடு காரணமாக, அதில் நடிக்கவில்லையே தவிர, வேறு எந்த ஒரு காரணமும் இல்லை என மனம் திறந்து கூறியுள்ளார் ஜோதிகா. இதை கேட்ட விஜய் ரசிகர்களும் பெருமூச்சி விட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here