தெலுங்கு படமொன்றில் நடிப்பதற்காக நடிகை சமந்தா அதிக சம்பளம் கேட்டதை அறிந்த தயாரிப்பாளர் திரும்பிக்கூட பார்க்காமல் போய்விட்டாராம்.

முன்னணி நடிகை

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. பொதுவாகவே ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரை மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைக்க அனைவரும் தயங்குவர். சில நடிகைகள் சினிமாவை விட்டே விலகி விடுவார். ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படி ஏதும் நடக்கவில்லை. திருமணத்திற்கு பின்பும் ஒரு முன்னணி கதாநாயகியாகவே இருந்து வருகிறார். திருமணத்திற்கு பின் சில வெற்றிப்படங்களை கொடுத்த சமந்தா, தற்போது புதுப்படங்களில் நடிக்கக் கதை கேட்டு வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமான சமந்தா, அப்படத்தில் இருந்து விலகியதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது ராஷ்மிகா மந்தனாவும், சமந்தாவும் இணைந்து வேறொரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

அதிக சம்பளம்

இந்நிலையில், புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ.3.5 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் திரும்பிக் கூட பார்க்காமல் போய்விட்டாராம். முன்னணி நடிகையான நயன்தாரா ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதைப் பார்த்து, சமந்தாவும் சம்பளத்தை அதிகமாக கேட்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. தற்போது லாக்டவுன் காலம் என்பதால் வீட்டிலேயே இருக்கும் சமந்தா, தோட்ட வேலைகள், சமையல், உடற்பயிற்சி, யோகா செய்வது என்று தனது நேரத்தை கழித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here