கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பூரண நலம்பெற வேண்டுமெனக் கூறி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை

தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எஸ்.பி.பியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எஸ்.பி.பி. பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமெனக் கூறி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினி உருக்கம்

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “இந்திய மொழிகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் சார், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளார். அவர் சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்தின் படங்களில் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடினால் தான் ஹிட்டாகும் என்ற செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் உண்டு. ரஜினியின் சமீபத்திய பேட்ட, தர்பார் முதற்கொண்டு ஏராளமான படங்களுக்கு ஓபனிங் சாங் பாடியவர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here