தான் அணியும் உடையில் கவனமாக இருப்பதாகவும், ஒருவர் என்ன உடை அணிய வேண்டுமென்பது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றும் நடிகை வாணி போஜன் கூறியுள்ளார்.

வெள்ளித்திரையில் வெற்றி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹிட்டான நடிகைகளுள் வாணி போஜனும் ஒருவர். ‘தெய்வமகள்’ என்ற சீரியல் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் இவர். அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர் வெள்ளித்திரையிலும் நடிகையாக அறிமுகமானார். சென்ற ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்த வாணி போஜன், தமிழில் ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படமும் இவருக்கு நன்றாக கைகொடுத்தது. படத்தைப் பார்த்தப் பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறிய நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவும் அப்படத்தை பார்த்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். வாணி போஜன் தற்போது வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, மேலும் பல வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அவரவர் விருப்பம்

வாணி போஜன் சமீபகாலமாக ஆபாசமற்ற கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும் ‘லாக்கப்’ படத்தில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்தனர். அவர்களுக்கு பதிலளித்துள்ள வாணி போஜன், தான் அணியும் உடையில் கவனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஒருவர் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றும் படங்களில் கதைக்கு ஏற்ப கவர்ச்சி தேவைப்பட்டால் அது எல்லை மீறாமல் இருந்தால் தவறில்லை எனவும் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here