பாக்யராஜ் இயக்கி நடித்து மிகப்பெரிய ஹிட்டான முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகை அனுஷ்கா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிட் திரைப்படம்

பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து, இயக்கி கடந்த 1983ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘ரீமேக்’ செய்யப்பட்டது.

நடிக்க மறுப்பு

தற்போது ‘முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகியதாகவும், அதற்கு அனுஷ்கா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால், புதிய படங்களை ஏற்கவில்லை என அனுஷ்கா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here