‘நடிகர் விஜய்யை ஒயின் பாட்டில் போல’ என வர்ணித்த நடிகை வனிதா விஜயகுமாரை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பிரச்சனை மேல் பிரச்சனை

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட நாளில் இருந்து, பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். மாறி மாறி சண்டைபோட்டு சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாகவே இருந்தார். இவர் அவருக்கு நஷ்டஈடு கொடுப்பாரா? அவருக்கு இவர் நஷ்டஈடு கொடுப்பாரா என்று முடிவில்லாமல் போய்க்கொண்டு இருந்தது வனிதாவின் பிரச்சனை. இந்த விவகாரத்தில் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர் சமூக வலைத்தளங்களில் அன்றாட பேச்சு பொருளாகவே இருந்து வந்தனர். இருப்பினும் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை என்றே சொல்லலாம்.

ஒயின் பாட்டில்

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ’’எனக்கு எப்போதும் நீங்களே முதல் ஹீரோ. நான் உங்களது முதல் ரசிகையாக உள்ளேன். உங்களது படம் திரையில் வரும்போது உங்கள் மீதான அபிமானமும் அன்பும் அதிகரித்துக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு ஒயின் பாட்டில் போல. வயது அதிகரிக்க உங்கள் மீதான அன்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இவ்வாறு வனிதா தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யை “ஒயின் பாட்டில் போல நீங்கள்’’ எனக் கூறியுள்ள வனிதாவை பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். தன் மீதான இமேஜை அதிகரிக்கவே விஜய் குறித்து வனிதா டுவீட் போட்டுள்ளார் என்றும் விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here