தமிழகத்தில் ஆகஸ்ட் 17ந் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்கு தடையின்றி இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இ-பாஸ்

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த் தொற்று பரவுவதை தடுக்க திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல் வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலமைச்சர் அறிவிப்பு

பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க ஏதுவாக, புதிய தளர்வுகளுடனான இ-பாஸ் நடைமுறை வருகிற 17 முதல் அமலுக்கு வரும். ஆதார் அல்லது ரேசன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். திருமணம், மரணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகிய காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். தொழில் துறையினர், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன. முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க ஏதுவாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனே வழங்கப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here