கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘நோ’ சொன்ன நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து மிலிந்த் ராவ் இயக்கத்தில் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் பல இயக்குநர்களிடம் கதைகளையும் கேட்டு கொண்டிருக்கிறார். ஹிந்தியில் மெகா ஹிட்டான ‘அந்தாதுன்’ என்ற திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தெலுங்கு ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நிதின் ஒப்பந்தமாகி இருக்கிறார். தபுவின் கதாபாத்திரத்திற்கு நயன்தாராவை அணுகி இருக்கிறார்கள். ஆனால் அந்த கதாபாத்திரம் கள்ளக்காதலுக்காக கணவரையே கொலை செய்யும் பெண்ணாக இருப்பதனால், அப்படத்தில் நடிக்க யோசித்துக்கொண்டிருந்த நயன், தன் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்து ‘நோ’ சொல்லிவிட்டாராம். ரூ.4 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறியும், வேண்டவே வேண்டாம் என்று நடையை கட்டிவிட்டார் நயன்தாரா. நயன்தாராவிற்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், இலியானா போன்ற நடிகைகளிடம் கேட்டுள்ளனர். ஆனால், இந்த வில்லங்கத்தை பார்த்த அனைவரும் தலைதெறிக்க ஓடி விட்டனர்.

டர்னிங் பாயிண்ட்

‘அந்தாதுன்’ தெலுங்கு ரீமேக் உரிமையை நித்தின் தனது சொந்த நிறுவனமான ஸ்ரேஷ்த் மூவீஸ் மூலம் ரூ.3.5 கோடிக்கு வாங்கியுள்ளார். படப்பிடிப்புகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில், கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் பிரசாந்த்தை வைத்து ரீமேக் செய்கிறார்கள் என்ற செய்தியும் தற்போது வெளிவந்திருக்கிறது. இதற்காக பிரசாந்த் பெருமளவு உடல் எடையை குறைத்துக் கொண்டு, தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். ‘அந்தாதுன்’ ஒரு மெகா ஹிட் திரைப்படம் என்பதனால், கண்டிப்பாக பிரசாந்துக்கு இது ஒரு டர்னிங் பாயிண்டாக அமையும் என்று திரைத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here