தனது பிறந்த நாளன்று வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, அதனை பின் தொடருமாறு நடிகர் விஜய்யை கேட்டுக் கொண்டுள்ளார்.

போட்டியில் சுவாரஸ்யம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்கும் நடிகர் – நடிகைகள் அனைவரும், சமூக வலைத்தளத்தின் மூலமாகவே பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் பல சவால்களில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். யாராவது தனக்கு விடும் சவாலை செய்து முடித்து புகைப்படமாகவோ அல்லது சிறிய வீடியோவாகவோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அந்த சங்கிலியில் மற்றவரை இணைக்க வேண்டும். டேக் செய்த நபர் அந்த சவாலை ஏற்று மறுபடியும் வேறொருவரை அந்த போட்டியில் இணைக்க வேண்டும். இது மாதிரியான விளையாட்டுகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் டிரெண்ட்டாகவே இருக்கின்றது. சமீபத்தில் வீட்டு வேலைகளை செய்யும் வீடியோக்களை வெளியிட்ட நடிகர் சிரஞ்சீவி, அந்த சவாலை நடிகர் ரஜினிகாந்த ஏற்குமாறு பதிவிட்டார். உச்ச நடிகர், நடிகைகள் அனைவரும் இந்த சவாலை ஏற்று செய்து வருகின்றனர்.

சவாலை ஏற்பாரா?

அந்த வகையில், தற்போது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு, தனது பிறந்தநாளன்று வீட்டில் ஒரு சிறிய மரக்கன்றை நட்டு வைத்து, இந்த சவாலை பின் தொடருமாறு நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை கேட்டுக் கொண்டார். எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் விஜய்யின் வரவுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது. இந்த நல்ல விஷயத்தை விஜய் கண்டிப்பாக ஏற்பார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், சில ரசிகர்களோ இதை நீங்கள் இப்போது தான் செய்கிறீர்கள், ஏற்கனவே எங்கள் தளபதி விஜய் இதனை செய்துவிட்டார் என்று கூறி அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இருப்பினும் மகேஷ்பாபு விடுத்துள்ள சவாலை விஜய் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here