விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் புது புரொமோ வெளியாகி சீரியல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

டிரெண்டான சீரியல்

தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். “பாரதி கண்ணம்மா” தொடர் தான் தற்போது விஜய் டிவியின் டிரெண்டிங் சீரியல். இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், கணவன் மனைவிக்குள் இருக்கும் பாசத்தையும், காதலையும் அழகாக வெளிக்காட்டும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கும் அவர்களை பிரிக்க, சிலர் செய்யும் சதியே இந்த சீரியலின் மையக்கருத்து. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல், தற்போது மீண்டும் ஒளிபரப்பாகிறது.

பிரிக்கும் வில்லத்தனம்

பாரதி என்ற ஹீரோவை அஞ்சலி, வெண்பா என்ற இரண்டு பெண்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் பாரதிக்கு, கண்ணம்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. அதனால் பாரதியையும், கண்ணம்மாவையும் பிரிக்க அஞ்சலியும், வெண்பாவும் பல சதித் திட்டங்களை செய்கின்றனர். ஒருபக்கம் அஞ்சலி சதி வேலைகளை செய்ய, மறுபக்கம் வெண்பா சதி வேலையில் ஈடுபடுகிறார். எப்படியாவது பாரதியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்குகின்றனர். அக்காவாக இருந்தாலும் கண்ணம்மாவுக்கு வேணுமென்றே நிறைய பிரச்சனைகளை கொடுத்து வருகிறாள் அஞ்சலி. இது ஒரு பக்கம் இருக்க, கல்லூரியில் படிக்கும்போதே பாரதியுடன் காதல் வயப்படுகிறார் வெண்பா. வேறொரு பெண் பாரதியை ஆசைப்படுகிறாள் என்று தெரிந்ததும், கொலை செய்யும் அளவிற்கு கூட போகிறாள் வெண்பா. வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி அவளை கொல்லத் துணியும் வெண்பாவால் பாரதியும் விபத்தில் சிக்குகிறார்.

மனதை மாற்றும் வெண்பா

பாரதி தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உனக்கு குழந்தை பிறக்காது என்று பொய் சொல்ல துவங்குகிறாள் வெண்பா. கதை இப்படி சென்று கொண்டிருக்க, பாரதியின் மனைவி கண்ணம்மா கர்ப்பமாகிறாள். தனக்கு குழந்தை பிறக்காது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பாரதியை குழப்பி, உனக்கு தான் குழந்தையே பிறக்காதே, ஆனால் உன் மனைவி எப்படி கர்ப்பமாக இருக்கிறாள் என்று மீண்டும் மீண்டும் அவர் மனதை துன்புறுத்தும் வகையில் பேசுகிறாள் வெண்பா. இப்படி மிகவும் சுவாரஸ்மாக கதை சென்றுகொண்டிருக்கும் வேலையில், கொரோனா ஊரடங்கு காரணத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

மீண்டும் ஏமாறும் பாரதி

தற்போது புதிய எபிசோடுகளுடன் இந்த தொடர் தொடங்கியுள்ளது. வெண்பாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூப்பரான என்ட்ரி கொடுத்த பாரதி, மீண்டும் வெண்பா செய்யும் சதிக்கு ஆளாகிறார். வெண்பா செய்யும் சதியை மையமாக வைத்து விஜய் டிவி தற்போது புதிய புரொமோவை வெளியிட்டுள்ளது. அந்தப் புரொமோவில், “எனக்கு எந்த குறையும் இல்லை என டெஸ்ட் எடுத்து நிரூபித்து, அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டை உன் மூஞ்சி மேல் தூக்கி எறிவேன் பாருனு” கோபமாக கத்துகிறார் ஹீரோ பாரதி. மருத்துவமைக்கு செல்ல வேண்டும் என்று தெரிந்த பாரதிக்கு, வெண்பாவிற்கு தெரிந்த மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என்று தெரியவில்லை. மருத்துவமனைக்கு சென்று டெஸ்ட் எடுக்க துவங்குகிறார் பாரதி. அந்த மருத்துவமனையும் வெண்பாவிற்கு பரிட்சயமானதால் அங்கேயும் சென்று டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றுகிறாள். மீண்டும் வெண்பாவிடம் ஏமாறுகிறார் பாரதி. இதைப்பார்த்த வெண்பா சந்தோஷத்தில் சிரிக்கிறாள். ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இந்தப் புரொமோ பார்த்த சீரியல் ரசிகர்கள், மிகுந்த ஆர்வத்துடன் புதிய எபிசோடுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here