மறைந்த பிரபல பாலிவுட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த்தைவிட அவர் வீட்டு வேலைக்காரரிடம் அதிகமுறை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல மர்மங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்த நாள் முதல் இன்று வரை தினம் தினம் புதுப்புது தகவல்களும், புதுப்புது செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. மும்பை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என பலரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுஷாந்த் மரணம் தொடர்ந்து சர்ச்சையில் இருப்பதாகவும், அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகும் சுஷாந்தின் தந்தை பீகார் போலீளில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக பிகார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல கோடி ரூபாய் மாற்றம்

சுஷாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளதை கண்டறிந்த போலீசார், அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அமலாக்கத்துறையும் ரியா மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே தலைமறைவாக இருந்த ரியா சக்ரபோர்த்தி நேற்று தனது சகோதரர் சௌத் சவுத்ரியுடன் இணைந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் சுஷாந்த்தின் பிசினஸ் பார்ட்னராக இருந்தது தெரியவந்தது. மேலும் பணப் பரிமாற்றம் குறித்து கேள்வி எழுப்பட்டு, ரியாவின் பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

வேலைக்காரரிடம் பேச்சு

இந்த நிலையில், நடிகை ரியா கடந்த ஒரு வருடம் யார் யாரிடமெல்லாம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்ற கண்டறியப்பட்டது. சுஷாந்த்தைவிட அவர் வீட்டு வேலைக்காரரிடம் ரியா அதிக மணிநேரம் பேசி இருக்கும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சுஷாந்திடம் அவர் 145 முறையும், அவரது வேலைக்காரர் ஆன சாமுவேலிடம் 287 முறையும் போன் செய்திருப்பது தெரியவந்தது. ரியா அவரது தந்தையிடம் 1192 முறையும், தனது சகோதரரிடம் 1069 முறையும், முன்னாள் மேயரான ஸ்ருதி மோடியிடம் 761 முறையும் பேசியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், சுஷாந்த்தோ காதலி ரியாவிடம் வெறும் 28 முறை மட்டுமே போன் செய்து உள்ளார் என்ற தகவல்களும் தெரிய வந்துள்ளது. இதைக்கேட்ட திரைப்பிரபலங்களும், சுஷாந்த் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சுஷாந்த் மரணத்தில் ரியா மீது சந்தேகம் இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here