கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளின் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 31 செ.மீ. மழையும், அவலாஞ்சியில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேல் கூடலூரில் 19 செ.மீ. மழையும், வால்பாறை, சோலையாறில் தலா 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியாரில் 12 செ.மீ., சின்னக்கல்லார், சின்கோனாவில் தலா 11 செ.மீ., நீலகிரி மாவட்டம் கிளென்மோர்கன், தோவாலாவில் தலா 10 செ.மீ., நடுவட்டம், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தலா 9 செ.மீ., தேக்கடியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here