விஜய், சூர்யா ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நடிகர் சூர்யா தான் பொறுப்பு என்றும் மீரா மிதுன் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை நாயகி 

சர்ச்சைக்கு மறுபெயர் என்று ஒன்று இருந்தால் அது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமான இவர், தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பலரும் விமர்சித்தாலும், அறிவுரை கூறினாலும் அதனை அவர் கேட்பதாக இல்லை. ஆனால் ரசிகர்களை திட்டுகிறாரே தவிர பதிவிடுவதை நிறுத்துவில்லை. சமீபத்தில் ரஜினி, விஜய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்த மீரா மிதுன், கமல்ஹாசனையும் சீண்டினார். திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். இந்த வரிசையில் தற்போது நடிகர் சூர்யா இணைந்துள்ளார்.

கொலை மிரட்டல் வருது

அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த மீரா மிதுன், அதில் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது எனக் கூறியிருக்கிறார். சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார் என்றும் ஆக்டிங்க்கான அர்த்தம் கூட அவருக்கு எதிரியாது எனவும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டி வருவதாக மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து மோசமான மெசேஜ்கள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன. என் மொபைல் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பு. இது என்னை உறுதியற்ற நிலைக்கு துாண்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here